புரோ கபடி போட்டிகள் 2017: வெல்லும் அணியினருக்கு ரூ. 8 கோடி வரை பரிசுகள்
புரோ கபடி போட்டிகளில் பங்கேற்று வெல்லும் அணியினருக்கு ரூ. 8 கோடி வரை பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கபடி பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : புரோ கபடி போட்டிகளில் பங்கேற்று வெல்லும் அணியினருக்கு ரூ. 8 கோடி பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, புரோ கபடி லீக் கமிஷனர் அனுபம் கோஸ்வாமி கூறுகையில், "
5வது புரோ கபடி லீக் போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. விளையாட அணிகள் தயார் நிலையில் உள்ளன. விளம்பரதாரர்கள் டீல் இப்போதே, போட்டிகள் தொடங்குவதற்கு முன்னே ஆரம்பித்து முடிந்துள்ளது.

8 கோடி ரூபாய் அளவுக்குப் பரிசுகள் கொடுத்து வீரர்களை உற்சாகப்படுத்த, அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது ஐந்தாவது லீக் போட்டிகள் ஆகும். இதில் லீக் சாம்பியன் அணி தேர்வு செய்யப்படவுள்ளது.
முதல் போட்டி தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கும், தமிழ் தலைவாஸ் அணிக்கும் இடையே நடக்கவுள்ளது" என்று தெரிவித்தார்.
புரோ கபடி லீக் போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 144 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் சுற்றுகளில் வெளியேறும் அணிகளுக்கு மறுபடி விளையாட வயில்ட் கார்ட் வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.
'ஏ' பிரிவில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங், பாந்தர்ஸ், புனே ரிபல்தான் யு மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்ச்சூன் ஜெய்ன்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ், பாட்னா பிரேட்ஸ், தெலுங்கு டைட்டான்ஸ், உ.பி.யோதாஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டிக்கு மூன்று குவாலிபையர் ஆட்டமும், இரண்டு எலிமினேட்டர் ஆட்டமும் நடைபெறும்.
Recommended Video

புரோ கபடி 'லீக்' போட்டியின் இறுதி ஆட்டம் அக்டோபர் 28-ந்தேதி சென்னையில் நடக்கிறது. செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 5-ம்தேதி வரை லீக் போட்டிகளும் சென்னையில் நடைபெற உள்ளது. இது தவிர 'எலிமினேட்டர் 2' ஆட்டமும் சென்னையில் அக்டோபர் 26-ந்தேதி நடக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications