கொள்ளை போகிறதா பொதுத்துறை வங்கி பணம்.. 4 வருடங்களில் ரூ.22,743 கோடி அபேஸ்
Recommended Video

டெல்லி: 2012-2016ம் ஆண்டு காலகட்டத்திற்கு நடுவே, மோசடிகளால், பொதுத்துறை வங்கிகள் 227.43 பில்லியன் ரூபாயை இழந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. இது ரூ.22,743 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், குஜராத் வைர வியாபாரி, நீரவ் மோடி ரூ.11,400 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாடுக்கு தப்பியோடிய செய்தியை தொடர்ந்து வங்கித்துறையில் நடந்த பல மோசடிகள் வெளியே வரத்தொடங்கியுள்ளன.
மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி டேட்டாவை அடிப்படையாக வைத்து கூறுகையில், 2017 டிசம்பர் 21 வரையிலான நிலவரப்படி, வங்கி மோசடி தொடர்பாக 25,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி
மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்படி, 2016-17ன் முதல் 9 மாதங்கள், ஐசிசிஐ வங்கியில் 455 மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 429 பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியில் 244 மோசடிகள் நடந்துள்ளதாகவும், ஹெச்டிஎப்சி வங்கியில் 237 மோசடிகள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வங்கிகள் தப்பவில்லை
ஸ்டேட் வங்கியை சேர்ந்த 64 ஊழியர்கள், 49 ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்கள், மற்றும் 35 ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள் மீது மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. 2016ல் சிண்டிகேட் வங்கியில் 4 பேர் மொத்தம் 386 கணக்குகளை துவக்கி, போலியாக காசோலைகள் மூலமாகவும், எல்ஐசி பாலிசி கிரெடிட் போன்றவற்றின் மூலமாகவும், 10 பில்லியன் அளவுக்கு நடந்த மோசடி இதற்கு ஒரு உதாரணம்.

ஆந்திரா வங்கி அதிகாரி
இவ்வாண்டு, ஆந்திரா வங்கி இயக்குநரை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் 5 பில்லியன் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. குஜராத்தை சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்றிற்கு உடந்தையாக இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகள்
பொதுத்துறை வங்கிகள் 2012 மற்றும் 2016ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், ரூ.227.43 பில்லியன் அளவுக்கான பணத்தை மோசடிகளால் இழந்துள்ளது என்று பெங்களூர் ஐஐஎம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications