ராடியா வழக்கு: மத்திய அரசு, சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்! நீதிபதி சிங்வி விலகல்!!
டெல்லி: அரசியல் தரகர் நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவான டேப்புகள் குறித்த வழக்கு விசாரணையில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், சிபிஐக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி சிங்வி தெரிவித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசியல் தரகர் நீரா ராடியாவின் டேப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாடா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் டேப்புகளை ஆராயவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களும் நீரா ராடியாவின் டேப் உரையாடலில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜி.எஸ். சிங்வி, வி. கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 2ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி சிங்வி இன்று அறிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications