ராடியா வழக்கு: மத்திய அரசு, சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்! நீதிபதி சிங்வி விலகல்!!
டெல்லி: அரசியல் தரகர் நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவான டேப்புகள் குறித்த வழக்கு விசாரணையில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், சிபிஐக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி சிங்வி தெரிவித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசியல் தரகர் நீரா ராடியாவின் டேப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாடா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் டேப்புகளை ஆராயவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களும் நீரா ராடியாவின் டேப் உரையாடலில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜி.எஸ். சிங்வி, வி. கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 2ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி சிங்வி இன்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications