ராகுல் காந்தி மீண்டும் வெளிநாடு பயணம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஓய்வுக்காக வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டுக்குச் செல்கிறார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஞாயிற்றுக்கிழமை தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள், பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு திடீரென வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல். இந்த தகவலை அவரே உறுதி செய்தார். இதுகுறித்து அவர் டுவிட்டர் செய்தியில், எனது பிறந்த நாளில் என்மீது நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு நன்றி.
என்னை நேரில் சந்தித்தவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். நான் குறுகிய பயணமாக சில நாட்களுக்கு வெளிநாடு செல்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். எனினும், அவர் எந்த நாட்டுக்கு சென்றார் என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற போது, அதில் பங்கேற்காமல் 56 நாட்கள் விடுப்பில் வெளிநாட்டுக்கு சென்றார். ராகுல் எங்கே எங்கே என்று எதிர்கட்சியினர் கேட்டபோது எல்லாம் அவர் விரைவில் வருவார் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விடுப்பில் இருந்து திரும்பிய பிறகு ராகுல் காந்தியிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் தெரிந்ததை பார்த்து காங்கிரஸ் கட்சியினர் வியந்தனர். அதேபோல் இந்த முறை ஏதாவது மாற்றம் நிகழலாம் என காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications