இந்திரா, ராஜீவ் கால 'ரத்த சம்பவங்கள்'-சீக்கியர் பொற்கோவிலில் பாத்திரம் கழுவி ராகுல் 'பிராயசித்தம்' ?
அமிர்தசரஸ்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலில் பாத்திரங்களை கழுவி ஆன்மீக சேவையாற்றினார்.
பஞ்சாப் பொற்கோவில்.. ராகுல் காந்தி குடும்பத்தில் பெருந்துயரங்களுடன் தொடர்புடையது. ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி படுகொலையின் பின்னணியில் பஞ்சாப் பொற்கோவில் இருக்கிறது.. இந்திரா காந்தி படுகொலையின் போது தந்தை ராஜீவ் பிரதமராக இருந்த நிலையில் நிகழ்ந்த பல்லாயிரம் சீக்கியர் படுகொலை இன்றளவும் துடைக்க முடியாத வரலாற்று கறையாகவே இருக்கிறது.

இந்திராவின் பொற்கோவில் நடவடிக்கை: 1980களில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி - காலிஸ்தான் தனிநாடு அமைக்க வேண்டும் என்பதற்காக பிந்தரன்வாலே தலைமையில் ஆயுத கிளர்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆயுத கிளர்ச்சியின் தலைமையகமாக இருந்ததுதான் பஞ்சாப் பொற்கோவில். பிரதமராக இருந்த இந்திரா காந்தி, பிந்தரன்வாலேவின் ஆயுத கிளர்ச்சியை அழித்தொழிக்க இதே பஞ்சாப் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரிலான இந்த ராணுவ நடவடிக்கையால் பிந்தரன்வாலே உள்ளிட்ட பெரும்பாலான சீக்கிய ஆயுதம் தாங்கிய அமைப்பினர் அழித்தொழிக்கப்பட்டனர். அப்போது பஞ்சாப் பொற்கோவிலில் ரத்த ஆறு ஓடியது.

இந்திரா காந்தி படுகொலை: பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு பிந்தரன்வாலே உள்ளிட்டோரை இந்திரா காந்தி அழித்தொழித்ததற்கு பழிவாங்கவே அவரை சீக்கியர் பாதுகாவலர்கள் சுட்டுப் படுகொலை செய்தனர். அப்போது ராகுல் காந்தி பிஞ்சு பிள்ளை.

ராஜீவ் கால சீக்கியர் படுகொலை: இந்திரா காந்தி படுகொலையால் கொந்தளித்து போன காங்கிரஸ் தலைவர்கள், டெல்லி உள்ளிட்ட இடங்களில் கண்ணில்பட்ட சீக்கியர்களை எல்லாம் காவு வாங்கினர். பல்லாயிரம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; எரித்துக் கொல்லப்பட்டனர். அப்போது, ஒரு பெரிய ஆலமரம் விழுகின்றன போது பூமி அதிரத்தானே செய்யும் என ராஜீவ் காந்தி பேசிய பேச்சு சீக்கியர் படுகொலையை நியாயப்படுத்தியிருந்தது. இப்போதும் சீக்கியர் படுகொலை வழக்குகளை காங்கிரஸ் தலைவர்கள் எதிர்கொண்டுதான் இருக்கின்றனர்.
One of the most enriching days of my life, as I joined @RahulGandhi ji in seva at the Golden Temple.
— K C Venugopal (@kcvenugopalmp) October 2, 2023
The divinity of Harmandir Sahib and the devotion of the pilgrims was truly awe-inspiring. pic.twitter.com/zcnA9JwaTY
ராகுல் காந்தி பிராயசித்த சேவை: இப்படி ராகுல் காந்தி குடும்பத்தினருடன் இணைந்த 'ரத்த சம்பவங்களுக்கு' சாட்சியமாக இருப்பதுதான் பஞ்சாப் பொற்கோவில். இந்த பொற்கோவிலுக்கு தனிப்பட்ட முறையில் ஆன்மீக பயணம் மேற்கொண்டார் ராகுல். பஞ்சாப் பொற்கோவிலில் வழிபாடு நடத்திய ராகுல் காந்தி பக்தர்களுக்கான பாத்திரங்களை கழுவி சேவையும் செய்தார். ஒருவகையில் ராகுல் காந்தி பிராயசித்தத்தை தேடித்தான் இந்த சேவையில் ஈடுபட்டார் என புரிந்து கொள்ளவும் முடிகிறது நம்மால்!
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications