ஜனாதிபதி உரையின் போது ராகுல்காந்தி 'தொண தொண' பேச்சு!
பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருந்த போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈ
டெல்லி : பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிக் கொண்டிருந்த போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் தனது உரையை நிறைவு செய்து கிளம்பும் முன்னரே ராகுல்காந்தி தனது இருக்கையை விட்டு கிளம்பியுள்ளார்.
2018-19ம் நிதியாண்டிற்கான பட்ட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதனையொட்டி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராம்நாத் கோவிந்து முதன் முறையாக உரையாற்றினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன்பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ராம்நாத்கோவிந்த், முத்தலாக் சட்டம், நாடு முழுவதும் 21 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது, அரசின் 400-க்கும் மேற்பட்ட திட்டங்களில் ஆதார் மூலம் நேரடி பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது உள்ளிட்டவற்றை பட்டியலிட்டார்.
இதே போன்று அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய குடியரசுத் தலைவர் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை இருமடங்காக உயர்த்தவும், குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை கிடைக்கவும் அரசு பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையை அனைவரும் படு சீரியஸாககேட்டுக் கொண்டிருந்தனர்.
குடியரசு தலைவர் வருவதற்கு 2 நிமிடங்களுக்கு முன் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு வந்து சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான ராகுல் காந்தி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த முதல் வரிசையில் அமர்ந்தார். மேலும் குடியரசு தலைவர் உரையின்பொழுது, ராகுல் காந்தி தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்களுடன் பேசியபடியே இருந்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு கை தட்டல்கள் எழுந்த பொழுதும் ராகுல் காந்தி அதில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குடியரசு தலைவர் உரை முடிந்தபின் சோனியா காந்தி தனது மேஜையில் தட்டிய நிலையிலும் எதிலும் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி, உரை முடிந்து குடியரசு தலைவர் செல்வதற்கு முன் எழுந்து சென்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications