காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை.. தமிழகத்திற்கு தண்ணீர் வருமா?
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள தலக்காவிரி என்ற பகுதியில் காவிரி உற்பத்தியாகி, மைசூர், மண்டியா, உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. குடகு மாவட்டத்தின் மடிகேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. மண்டியாவிலும் மழை பெய்துள்ளது. இந்த மழையிலானால் கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி பாசன பகுதிகளில், விவசாய நிலங்களில் தண்ணீர் பாசனம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மழை தொடர்ந்தால் தமிழகத்திற்கும் காவிரியில் சிறிது கூடுதல் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. இந்த நிலையில்தான், கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அடுத்ததாக சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரும்போது, கர்நாடக தரப்பில் எந்த மாதிரியான வாதத்தை முன் வைப்பது என்பது குறித்து அதில் பேசப்பட்டது.
காவிரியில் நீர் வரத்து அதிகரித்தால் நீரை தமிழகத்திற்கு தராமல் இருந்தது ஏன் என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் வாதம் முன்வைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் இதுகுறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications