ராஜஸ்தானில் திடீர் திருப்பம்.. முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நாளை எம்எல்ஏக்கள் அவசர மீட்டிங்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏகள் ஆலோசனை கூட்டம் நாளை ஜெய்ப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாக முதல்வர் கெலாட் குற்றம்சாட்டியிருந்த நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,.
ராஜஸ்தானில் முதல்வராக அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ ஆட்சி நடந்து வருகிறது. கு துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் கெலோட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிருப்தி
சச்சின் பைலட் முதல்வர் கெலாட் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக தகவல் வெளியான நிலையில், திடீரென தங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

ரகசிய இடத்தில்
இதற்கிடையே அதிருப்தியில் இருந்த துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரை டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

காங்கிரஸ் அறிவிப்பு
இந்நிலையில் பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவும், சச்சின் பைலட்டுடன் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்பிக் கொண்டிருப்பதாக அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாகவும் ஆனால் அந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளதும் என்றும் கூறினார். பாஜக நினைத்தது நடக்காது என்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் அவினாஷ் பாண்டே நமபிக்கை தெரிவித்தார்.

முதல்வர் கூட்டம்
இதனிடையே முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம், ஜெய்ப்பூரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நாளை காலை 10.30மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றால் பிரச்சனை தீர்ந்துவிட்டதாக முடிவுக்கு வர முடியும். மாறாக பங்கேற்க வரவில்லை என்றால் பிரச்சனை தீவிரமாக உள்ளதாக கருதப்படும். எனவே நாளைய கூட்டம் காங்கிரஸ்க்கு முக்கியமானதாகும். ஏனெனில் காங்கிரஸ் கட்சி கர்நாடகா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஆட்சியை பறிகொடுக்குமா அல்லது காப்பாற்றுமா என்பது நாளை ஓரளவு தெரிந்துவிடும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications