பேசி தீர்க்கலாம் வாங்க.. மணிப்பூர் போராளிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அழைப்பு
இம்பால்: ‛‛வன்முறையை கைவிட்டுவிட்டு அமைதி பேச்சுக்கு வாருங்கள். பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக உள்ளது'' என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மணிப்பூர் போராளிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. உத்தரபிரதேசத்தில் 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இன்னும் 5 கட்ட தேர்தல்கள் உள்ளன. உத்தரகாண்ட், கோவாவில் நேற்று தேர்தல்கள் முடிவடைந்தன.
பஞ்சாப், மணிப்பூரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 60 தொகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூருக்கு பிப்.,28 ல் முதற்கட்ட தேர்தலும், மார்ச் 5ல் இரண்டாம் கட்ட தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பால் மாவட்டம் லான்தபால் பகுதியில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:

பேச்சுவார்த்தைக்கு தயார்
மணிப்பூர் போராளிகள் வன்முறைறை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வன்முறை குறைந்துள்ளது. வன்முறையை முற்றிலும் குறைத்து அமைதி, வளர்ச்சியை கொண்டுவர பாஜக அரசு முயற்சித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்து, மாநிலத்துக்கான சுற்றுலா வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

மெஜாரிட்டியுடன் வெற்றி
வரும் தேர்தலில் பாஜக மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத திட்டங்களினால் நாட்டின் பிறபகுதிகளை ஒப்பிடும்போது வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியின்றி இருந்தன.

வாஜ்பாய் காலம்
இந்த பிராந்தியத்தை காங்கிரஸ் முற்றிலுமாக ஒதுக்கிவிட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வளர்ச்சிக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கினார். அதன்பின் 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மீண்டும் மாநிலம் ஒதுக்கப்பட்டது.

வளர்ச்சி பாதையில்...
2017 ல் மாநிலத்தில் பாஜக ஆட்சி வந்த பிறகு வளர்ச்சி பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதற்குமுன் கலவரம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. பாஜக கட்சி தலைமையின் கீழ் மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்கிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications