ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீட்கப்பட்டு உயிரிழந்த 3 வயது குழந்தை!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டும் காப்பாற்ற முடியாமல் பலியான சம்பவம் பெரும் பரிதாபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் நிகாஜ் என்ற கிராமத்தில் உள்ள வயல்வெளியில் ஒரு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு அது சரிவர மூடப்படாமல் இருந்தது. நேற்று இந்த ஆழதுளை கிணற்றுக்கு அருகே பிரியன்ஷு என்ற 3 வயது ஆண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை பிரியன்ஷு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது.
100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 46 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி கொண்டது. சம்பவம் நடந்த போது குழந்தையின் பெற்றோர் அருகில் இருந்ததால் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் இணைந்து குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின் இன்று அதிகாலை 2 மணியளவில் குழந்தையை உயிருடன் மீட்டனர். இதையடுத்து உடனடியாக குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து குழந்தை கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனை 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications