ஹாலிவுட் ஸ்டைலில் சுரங்கம் தோண்டி கோடிக்கணக்கில் கொள்ளை– ஹரியானா வங்கியில் பகீர் திருட்டு!

Subscribe to Oneindia Tamil

ஹோகனா: ஹரியானவில் சுரங்கம் அமைத்து வங்கியில் உள்ள பணம், நகைகளை கொள்ளையர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஹோகானா நகரில் உள்ளது பஞ்சாப் தேசிய வங்கி. வங்கியின் மறுபுறம் ரோட்டை கடந்து பல மாடி கட்டிடம் உள்ளது.

அங்கு இருந்து 125 அடி நீளத்திலும், 2.5 அடி விட்டத்திலும் சுரங்கம் அமைத்து கொள்ளையர்கள் வங்கிக்குள் கடந்த சனிக்கிழமை இரவு புகுந்து உள்ளனர்.

கொள்ளை போன பணம்,நகை:

அங்கு இருந்த லாக்கரை உடைத்து கோடிக்கணக்கான் பணம், நகைகளை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

உலுக்கி எடுக்கும் கொள்ளை:

சமீபத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் இது மிகப்பெரிய கொள்ளை சம்பவமாகும். இந்த சம்பவம் குறித்த தகவல் கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் வெளியே தெரியவந்தது. கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சுரங்கப்பாதையை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மூன்று அறைகளில் சுரங்கம்:

சுரங்கபாதை கட்டிடத்தின் 3 அறைகளில் சுரங்கம் தோண்டும் பணியை செய்து உள்ளனர். அது யாருக்கும் தெரியாமல் நீண்ட நாட்களாக நடைபெற்று இருந்து இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பெட்டக அறையில் சுரங்கம்:

சுரங்கபாதை சரியாக வங்கியின் பெட்டக அறைக்கு வந்து உள்ளது. அங்கு பாதுகாப்புக்கு இருந்த கம்பிகளை முற்றிலுமாக தகர்த்து உள்ளனர்.

360 லாக்கர்கள் உடைப்பு:

வங்கி அதிகாரிகள் 90 முதல் 360 லாக்கர்களை கொள்ளையர்கள் உடைத்து உள்ளதாக தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை குறித்து அதிகாரிகள் மதிப்பிட்டு வருகிறார்கள்.

பலநாள் திட்டம்:

இந்த கொள்ளை குறித்து கடந்த சில மாதங்களாக கொள்ளையர்கள் திட்டமிட்டு வந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+