குண்டூர்: சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளை தாக்கி நகை கொள்ளை
குண்டூர்: குண்டூர் அருகே சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று புறப்பட்டு சென்றது.
ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே செல்லும் போது மர்ம ஆசாமிகள் சிலர் எஸ்-7, எஸ்-9, எஸ்-10 ஆகிய பெட்டியில் புகுந்து தூங்கிக் கொண்டு இருந்த பயணிகளை கத்தி முனையில் மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்தனர்.
பெண்களிடம் இருந்து நகையை பறித்தனர். மேலும் ஆண் பயணிகளின் செல் போன், லேப்-டாப் மற்றும் பணத்தை பிடுங்கினர்.
பொருட்களை தரமறுத்த பயணிகளை தாக்கினர். பின்னர் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி அவர்கள் தப்பி விட்டனர்.
சுமார் 15 பயணிகள் 50 பவுன் நகை மற்றும் பொருட்களை இழந்து உள்ளனர். ரயில் செகந்திரபாத் வந்து அடைந்ததும் பயணிகள் ரயில்வே போலீசில் புகார் செய்தனர்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அந்த ரயிலில் பயணம் செய்தவர்களா? அல்லது வழியில் ஏறியவர்களா? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக ரயிலில் நடைபெறும் கொள்ளைச் சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications