பாகிஸ்தான், வங்கதேசமும் இந்து நாடுகளே: ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வம்பு பேச்சு
மதுரா: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் இந்துக்களின் தேசம்தான் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மதுராவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட மோகன் பகவத் கூறியதாவது:
ஒரே இந்து நாடு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இந்தியா என்பது இந்து நாடு என்ற நம்பிக்கையை எந்த விலை கொடுத்தாலும் மாற்ற முடியாது.

சில மக்கள் தங்களை இந்துக்கள் என சொல்கின்றனர். சிலர் இந்தியன் என சொல்கின்றனர். இன்னும் சிலர் தங்களை ஆரியர்கள் என்றும் சிலர் உருவ வழிபாட்டில் நம்பிக்கையற்றவர்கள் எனவும் கூறிக்கொள்கின்றனர்.
இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று ஏற்றுக்கொண்டாலும் எந்த மாற்றமும் இதில் ஏற்படாது. இந்திய துணைக்கண்டத்தில் வாழும் அனைவருமே இந்துநாட்டை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வேறுபட்ட குடியுரிமையை கொண்டிருந்தாலும் அவர்களுடைய நேஷனாலிட்டி இந்துதான்.
சிந்து நதி இங்கு ஓடியதால் அரபு மன்னர்கள் இந்த பகுதியை இந்து என அழைக்க தொடங்கினர். பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிடம் இருந்து பிரிக்கப்பட்டது. 1971 ல் வங்காளதேசம் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள மக்களின் குடியுரிமை மாறுவதற்கு பிரிக்கப்பட்டதே காரணம். ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளையோ நாடுகளையோ விட்டு செல்லவில்லை. எனவேதான் அவர்களின் நேஷனாலிட்டி இன்னும் மாறவில்லை என்று நான் கூறுகிறேன்.
சில மக்கள் தெளிவில்லாமல் தங்களை கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லீம்கள் எனவும் கூறிக்கொள்கின்றனர். இந்த நிலப்பரப்பின் பழங்கால பெயர் இந்துஷ்தான். வெளிப்படையாகவே இங்கு வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்துக்களே
இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.
மதுராவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட அதன் தலைவர் மோகன் பகவத், ஒரே இந்து நாடு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இந்தியா என்பது இந்து நாடு என்ற நம்பிக்கையை எந்த விலை கொடுத்தாலும் மாற்ற முடியாது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications