மாலேகான் குண்டுவெடிப்பு: ஜாமீன் கோரும் பெண் சாமியார் பிரக்யா சிங்
மும்பை: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருந்து வரும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
2008ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங் தாகூர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அண்மையில் உஜ்ஜைனி நகரில் நடந்த கும்பமேளாவில் கலந்து கொண்டு ஷிப்ரா நதியில் புனித நீராட அவருக்கு நீதிமன்றம் உத்தரவு அளித்தும் போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து அவர் சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கியதால் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு போபாலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் தனது பெயரை சேர்க்கப் போவது இல்லை என்று தேசிய புலனாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளதையும், தன் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவர் ஜாமீன் கோரியுள்ளார்.
அவரது மனுவை மும்பை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 6ம் தேதி அவரது மனு விசாரணைக்கு வருகிறது.முன்னதாக அவர் பல முறை ஜாமீன் கோரி அது மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications