மாலேகான் குண்டுவெடிப்பு: ஜாமீன் கோரும் பெண் சாமியார் பிரக்யா சிங்
மும்பை: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருந்து வரும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
2008ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங் தாகூர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அண்மையில் உஜ்ஜைனி நகரில் நடந்த கும்பமேளாவில் கலந்து கொண்டு ஷிப்ரா நதியில் புனித நீராட அவருக்கு நீதிமன்றம் உத்தரவு அளித்தும் போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து அவர் சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கியதால் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு போபாலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் தனது பெயரை சேர்க்கப் போவது இல்லை என்று தேசிய புலனாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளதையும், தன் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவர் ஜாமீன் கோரியுள்ளார்.
அவரது மனுவை மும்பை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 6ம் தேதி அவரது மனு விசாரணைக்கு வருகிறது.முன்னதாக அவர் பல முறை ஜாமீன் கோரி அது மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications