கல்பர்கி, தபோல்கர், பன்சாரே ஆகியோரைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டது ஒரே ரக துப்பாக்கி!
பெங்களூரு: முற்போக்குவாதிகளான எம்.எம்.கல்பர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரே ரக துப்பாக்கியால்தான் என்று கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் இவர்களை திட்டமிட்டு ஒரே கும்பல்தான் கொன்றிருக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.
கல்பர்கி கொலையை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீஸார் இவ்வாறு தெரிவித்துள்ளனர். கல்பர்கி மற்றும் தபோல்கர், பன்சாரே ஆகியோரைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டது ஒரே துப்பாக்கி என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வாரம்தான் இந்த மூன்று பேரும் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று கொலைக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாகவும், கொலைகளைச் செய்தது ஒரே கும்பலாக இருக்கும் என்று கர்நாடக போலீஸ் துறை அமைச்சர் பரமேஸ்வராவும் கூறியுள்ளார்.
அதேசமயம், இந்த மூன்று கொலைகளையும் செய்தது ஒரே கும்பல் இல்லை, இவை வேறு வேறு என்று மத்திய அரசு கூறியது பொய் என்றும் நிரூபணமாகியுள்ளது.
இந்த மூன்று கொலைகளிலும் 7.65 எம்எம் நாட்டுத் துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கர்நாடக சிஐடி போலீஸார், கர்நாடக அரசிடம் கொடுத்துள்ள ரகசிய அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆயுத நிபுணர்களின் தீவிர ஆய்வுக்குப் பின்னர் மூன்று கொலைகளிலும் பயன்படுத்தப்பட்டது 7.65 எம்.எம் நாட்டுத் துப்பாக்கி என்பது நிரூபணமாகியுள்ளது. இதை இரண்டு விதமாக கிராஸ் செக் செய்து பார்த்தோம். அதிலும் இதே முடிவே வந்தது.
இது நிச்சயம் எதேச்சையானதாக தெரியவில்லை. மாறாக ஒரே கும்பல்தான் இந்த 3 பேரையும் கொன்றிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறோம் என்று கூறியுள்ளது சிஐடி..
இந்தக் கொலை வழக்கில் பல ஒற்றுமைகள் உள்ளன என்பது உண்மைதான். மூவருமே காலையில்தான் கொல்லப்பட்டனர். மூவரையுமே பைக்கில் வந்த இளைஞர்கள்தான் சுட்டுக் கொன்றனர். சிசிடிவி கேமரா இல்லாத இடங்களில்தான் மூவருமே கொல்லப்பட்டனர்.
பிப்வரி 20ம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார் கோவிந்த் பன்சாரே. ஆகஸ்ட் 20ம் தேதி புனேவில் வைத்து நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்பர்கி ஆகஸ்ட் 30ம் தேதி கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications