For Daily Alerts
Just In
கேட்டது கடலளவு.. ஆனால் சசிகலாவுக்கு ஜெயிலில் கிடைத்திருப்பது இம்புட்டுதான்!
பெங்களூரு சிறையில் பல சலுகைகளைக் கேட்டிருந்தார் சசிகலா. ஆனால் மிகக் குறைவான சலுகைகளே அவருக்குக் கிடைத்துள்ளது.
பெங்களூரு: பெங்களூர் சிறையில் பல சலுகைகளைக் கேட்டிருந்தார் சசிகலா. ஆனால் அவருக்குக் கிடைத்திருப்பது விரல் விட்டு எண்ணும் அளவிலான சலுகைகள்தான்.
அவருக்குக் கிடைத்துள்ள சலுகைகள் விவரம்:
- அவருக்குக் கட்டில் தரப்பட்டுள்ளது
- 24 மணி நேர சுடுநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது
- மினரல் வாட்டர் வசதிக்கும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிவி தரப்பட்டுள்ளது
- வாக்கிங் போக வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
- வெஸ்டர்ன் டாய்லெட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
சசிகலா, சிறை சாப்பாடுதான் சாப்பிட்டாக வேண்டும். சசிகலா அறையில் இளவரசியும் இன்னொரு பெண்ணும் தங்குவார்கள். தினசரி 3 வேளை சசிகலாவுக்கு உணவு வழங்கப்படும்
இதுவே அதிகம்தான். இதைத் தவிர மேலும் பல சலுகைகளைக் கேட்டிருந்தார் சசிகலா. ஆனால் நீதிபதியும், சிறை அதிகாரிகளுக்கும் அதற்கு ஸாரி சொல்லி விட்டனர்.
Comments
English summary
Sasikala has been denied home cooked food but to eat jail food, She has to share a cell with two women.