கேட்டது கடலளவு.. ஆனால் சசிகலாவுக்கு ஜெயிலில் கிடைத்திருப்பது இம்புட்டுதான்!
பெங்களூரு சிறையில் பல சலுகைகளைக் கேட்டிருந்தார் சசிகலா. ஆனால் மிகக் குறைவான சலுகைகளே அவருக்குக் கிடைத்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூர் சிறையில் பல சலுகைகளைக் கேட்டிருந்தார் சசிகலா. ஆனால் அவருக்குக் கிடைத்திருப்பது விரல் விட்டு எண்ணும் அளவிலான சலுகைகள்தான்.

அவருக்குக் கிடைத்துள்ள சலுகைகள் விவரம்:
- அவருக்குக் கட்டில் தரப்பட்டுள்ளது
- 24 மணி நேர சுடுநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது
- மினரல் வாட்டர் வசதிக்கும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிவி தரப்பட்டுள்ளது
- வாக்கிங் போக வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
- வெஸ்டர்ன் டாய்லெட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
சசிகலா, சிறை சாப்பாடுதான் சாப்பிட்டாக வேண்டும். சசிகலா அறையில் இளவரசியும் இன்னொரு பெண்ணும் தங்குவார்கள். தினசரி 3 வேளை சசிகலாவுக்கு உணவு வழங்கப்படும்
இதுவே அதிகம்தான். இதைத் தவிர மேலும் பல சலுகைகளைக் கேட்டிருந்தார் சசிகலா. ஆனால் நீதிபதியும், சிறை அதிகாரிகளுக்கும் அதற்கு ஸாரி சொல்லி விட்டனர்.












Click it and Unblock the Notifications