சசிகலா புஷ்பாவிற்கு முன்ஜாமீன் கிடைக்குமா?- சுப்ரீம்கோர்ட் திங்கட்கிழமை விசாரணை
டெல்லி: பணிப்பெண்கள் அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கோரி ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள் இருவர், சசிகலா, அவரது கணவர் மற்றும் மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். நிர்வாண மசாஜ் செய்ய கட்டாயப்படுத்தினர் என்று அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

இந்த புகாரின் பேரில் சசிகலா புஷ்பா அவருடைய லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப், தாய் கவுரி ஆகிய நான்கு பேர் மீது தூத்துக்குடி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை இரண்டு வாரங்களுக்கு முன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிராகரித்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அவருடைய மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனையடுத்து சசிகலா புஷ்பா வழக்கறிஞர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜராகி வழக்கின் அவசரம் கருதி மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு சசிகலா புஷ்பாவின் முன் ஜாமீன் மனுவை திங்கட்கிழமை விசாரிப்பதாக கூறியுள்ளது.
சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் மற்றும் தாய்க்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது திங்கட்கிழமை தெரியவரும். முன்ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் அவரும் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications