என்னா தில், என்னா ஸ்டைல்... சிறைக் கைதி போலவே தெரியலையே சசிகலாவைப் பார்த்தால்!
ஸ்டைலாக சுடிதாரில் ஷாப்பிங் போய்விட்டு தில்லாக சிறைக்கு திரும்பும் சசிகலாவின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மாடர்ன் மங்கையாக உலா வரும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் கழுத்துவரை மறைக்கப்பட்ட ரவிக்கை அணிந்து அரசியல்வாதியாக மாறினார்.
50 நாட்கள் கூட அந்த வேடம் நீடிக்கவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறை சென்றார். அங்கே அவருக்கு சிறை தண்டனைக்கு உரிய ஆடைகள் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வசதியாக வாழ்க்கை நடத்தியுள்ளார் சசிகலா.
சசிகலாவின் ஆடம்பர வாழ்க்கை பற்றிய வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்தான் இளவரசியோடு தில்லாக வெளியே ஷாப்பிங் போய்விட்டு சசிகலா சிறை திரும்பும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Exclusive video 3..#Sasikala going to shopping from Jail. Is democracy alive??? These criminals should be hanged in front of public. pic.twitter.com/1y5x1ZazcQ
— Hari Prabhakaran (@Hariadmk) July 18, 2017
அதில் செம ஸ்டைலாக இருக்கிறார் சசிகலா. அவரது உடை மட்டுமல்ல நடை கூட மாறியுள்ளன. சசிகலாவை பார்த்தால் சிறைக்கைதி போலவே தெரியவில்லை. எங்கோ இன்ப சுற்றுலா சென்று விட்டு அங்கே ஷாப்பிங் செய்து விட்டு வருவது போல உள்ளது. இந்த வீடியோதான் இப்போ வைரலாகி வருகிறது.
சிறை கைதிகளுக்கு என்று உடை கலாச்சாரம் உள்ளது. ஆனால் சசிகலாவோ அதைப்பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
சசிகலா கைதிக்கான உடையை அணியாமல் நைட்டியுடன் வலம் வரும் வீடியோ வெளியானது. அந்த பீதி அடங்குவதற்குள் சசிகலா சுடிதார் அணிந்துகொண்டு சிறையில் இருந்து வெளியே சென்றுவிட்டு திரும்பும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.