மேகாலயா சுரங்கத்தில் பாதுகாப்பு இல்லைதான்.. வறுமைக்கான ரிஸ்க் இது .. உயிர் தப்பியவர் பரபர பேட்டி
சிராங்: மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் பாதுகாப்பு இல்லைதான். என்ன செய்வது வறுமைக்காக இதுபோன்று உயிரை பணயம் வைக்க வேண்டியது உள்ளது என்று நிலக்கரி சுரங்க விபத்து சம்பவத்தில் உயிர் தப்பியவர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
கிழக்கு ஜெயின்தியா மலைகளில் எலி பொந்து அளவிலான ஓட்டையை தோண்டி அதன் மூலம் நிலக்கரி எடுப்பர். இது போன்ற பொந்துகள் ஆபத்து மிக்கவை என்பதால் இந்த நிலக்கரி சுரங்கத்துக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய தீர்ப்பாயம் தடை விதித்தது.
இந்த தடையையும் மீறி இந்த சுரங்கம் லைடீன் நதிக்கு அருகே நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் 14 சுரங்க ஊழியர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் இவர்கள் பள்ளம் தோண்டும் போது சரிந்து அதில் விழுந்தனர். சுமார் 360 அடி ஆழ பள்ளத்தில் 70 அடிக்கு நீர் தேங்கியது.

15 பேர்
இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 15 பேரையும் காணாது அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இது குறித்து சம்பவம் நிகழ்ந்த போது உயிர் தப்பிய சாயப் அலி கூறுகையில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மழை நீர் உள்ளே புகுந்ததும் நான் உள்பட 5 பேர் வெளியேறி விட்டோம். எனினும் 15 பேர் சிக்கியுள்ளனர்.

ரிஸ்க்
இந்த தண்ணீரால் நிலக்கரி மிகவும் இளகியதாக அதாவது களிமண் போல் மாறிவிடும். இந்த நிலக்கரி சுரங்கம் பாதுகாப்பானதாக இல்லை என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் என்ன செய்வது. வறுமைக்காக இதுபோன்ற ரிஸ்க்குகளை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

குடும்பம் நடத்த முடியும்
இந்த சட்டவிரோத சுரங்கத்தில் வீட்டுக்கு ஒருவர் என பணியாற்றி வருகின்றனர். பன்பாரியில் உள்ள படிக்காதவர்கள் இதுபோன்ற சுரங்கத்துக்கு வந்து பணியாற்றுகின்றனர். ஒரு நாளைக்கு ரூ. 2000 சம்பளம். அது எங்களுக்கு தேவைப்படுகிறது. இங்குள்ள மக்கள் மிகவும் ஏழை என்பதால் அது போன்ற ரிஸ்கான வேலைகளுக்கு சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்றார் அவர்.

வேதனை
இது போல் தன் கணவர் உயிரோடு இருக்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் அவரது சடலத்தையாவது நான் ஒரு முறை பார்க்க வேண்டும் என 15 பேரில் ஒருவரது மனைவி கூறியது வேதனையை தருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications