புனித வெள்ளி தினத்தில் நீதிபதிகள் கூட்டம்.. கோபத்தில் பிரதமர் விருந்தை புறக்கணித்த நீதிபதி!
டெல்லி: புனித வெள்ளி தினமான நேற்று நீதிபதிகள் கூட்டத்தை நடத்தியதால் கோபம் அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், பிரதமர் நரேந்திர மோடி கொடுக்க உள்ள இரவு விருந்தை புறக்கணித்துவிட்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 24 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கு பெறும் இரண்டு நாள் கருத்தரங்கம் புனித வெள்ளியான நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட நீதிபதிகளுக்கு, இன்று இரவு, பிரதமர் விருந்து அளிக்கிறார்.

ஆனால் கேரளாவை சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் புனித வெள்ளி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் பிரதமர் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ள முடியாது என பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அரசால் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்ட பண்டிகை மற்றும் சுப தினங்களில் முக்கியமான கூட்டங்களை நடத்தப்படுவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அனைத்து மத தினங்களுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமருக்கு ஜோசப் வலியுறுத்தியுள்ளார். புனித வார இறுதியான, இந்த மூன்று நாட்களும், தான், தனது குடும்பத்தாருடன் கேரளாவில் இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
புனித வெள்ளி அன்று நீதிபதிகள் கூட்டம் நடத்த அழைப்புவிடுத்திருந்த, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவுக்கும், இதே குரியன் ஜோசப் கடிதம் எழுதி எதிர்ப்பை தெரிவித்திருந்தார். தலைமை நீதிபதியும், பதிலுக்கு கடிதம் எழுதி, நீதித்துறை அமைப்புதான் தனி நபர்களை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications