அயோத்தி விவகாரம்: உடனே விசாரிக்க கோரிய சு.சுவாமி கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
பாபர் மசூதி- ராமர் கோவில் விவகாரம் தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க கோரிய சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
டெல்லி: அயோத்தி பாபர் மசூதி- ராமர் கோவில் விவகாரம் தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க கோரிய பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை பங்கிட்டு தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை கடந்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது, இது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சனை; நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண்பதுதான் சரியானதாக இருக்கும். தேவைப்பட்டால் மத்தியஸ்தம் செய்ய ஒருவரை நீதிமன்றமே நியமிக்கும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
அத்துடன் நீதிமன்றத்துக்கு வெளியே சமரச பேச்சுவார்த்தை குறித்த கருத்தை தெரிவிக்குமாறும் உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச், சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை ஏற்று விசாரணை நடத்த இது சரியான தருணம் அல்ல. இந்த வழக்கில் புதிய விசாரணை தேதியையும் அறிவிக்க முடியாது. ஏற்கனவே நீதிமன்றத்துக்கு வெளியே சமரச தீர்வு காண வலியுறுத்தியுள்ளோம். அப்போது பிறப்பித்த உத்தரவு அடிப்படையில்தான் வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications