வறுமை ஒழிப்பில் அறிவியல், தொழில்நுட்பம் முக்கிய பங்கு: பிரதமர் மோடி
மும்பை: நாட்டில் வறுமையை ஒழிப்பதில் அறிவியலும் தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகித்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையில் 102 வது அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகம் முழுவதும் இருந்து நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்கள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் உள்பட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

102 வது இந்திய அறிவியல் மாநட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
அறிவியல் மாநாட்டில் பேசுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். நாட்டின் வறுமையை குறைக்க அறிவியலும் தொழிநுட்பமும் பெரும் பங்காற்றியுள்ளன.
சிறந்த நிர்வாகத்துக்கு அறிவியல் ஆற்றியுள்ள பங்கை அளவிட முடியாது. விஞ்ஞானிகளின் தொண்டு உள்ளத்துக்கு தலை வணங்குகிறேன். விஞ்ஞானிகள் நாட்டை முன்னெடுத்து சென்றுள்ளனர்.
உலகின் முன்னோடிகள் நாம் தான் என்பதை பல இடங்களில் நிரூபித்துள்ளோம். எப்போதெல்லாம் உலகம் தனது கதவுகளை அடைத்ததோ, அப்போதெல்லாம் நமது ஆராய்ச்சியாளர்கள் உறுதியுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துள்ளனர்.
அறிவியல் வளர்ச்சி தான் மனிதனை வளர்ச்சி பெற வைத்தது. வறுமை நோய்களை போக்குவதில் அறிவியல், தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை எல்லைகளை கடந்து உலகை இணைக்க கூடியவை.
நாட்டில் ஆராய்ச்சி மற்றும் தொழிநுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். மங்கள்யானின் வெற்றி இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் உயர்த்தியுள்ளது. அறிவியல் துறைகளின் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications