Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் - 16 கிரிமினல்கள் போட்டி

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர். இவர்களில் 16 வேட்பாளர்கள் கடும் குற்றம் செய்த குற்றவாளிகள் ஆவார்.

60 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வாரம் நடைபெற்றது. இன்று 2ஆம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Second phase of Manipur state assembly elections - 16 Criminals Competition

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு மையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலின் போது ஒப்பிடுகையில் இவர்களின் சொத்து மதிப்பு அதிகளவு உயர்ந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் கோடீஸ்வரர்கள் ஆவர்.

தேர்தலில் கடந்த 2017ஆம் ஆண்டு சுயேட்சைகள் உள்பட பல்வேறு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல். ஏ.க்கள் 60 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். இவர்களின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 2 முதல் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு இவர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 2.28 கோடியாக இருந்தது. இது தற்போது 4.22 கோடியாக அதிகரித்துள்ளது. வனத்துறை அமைச்சரின் சொத்து 2017ஆம் ஆண்டு 2 லட்சமாக இருந்தது. இது தற்போது 3.97 கோடியாக அதிகரித்துள்ளன. கடந்த தேர்தலின் போது ஒப்பிடுகையில் இவர்களின் சொத்து மதிப்பு அதிகளவு உயர்ந்துள்ளது.

இன்று நடைபெறும் 2ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 92 வேட்பாளர்களில் 16 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 14 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த தேர்தலை விட இது அதிகமாகும். வேட்பாளர்களில் 56 பேர் 5 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் ஆவார்கள். 205 வேட்பாளர்கள் டிகிரி படித்தவர்கள். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+