மணிப்பூரில் தனி மாநிலம்: தமிழ்நாடு, மிசோரம் உட்பட 6 மாநிலங்களில் 'குக்கி'கள் நவ.29-ல் போராட்டம்!
இம்பால்: மணிப்பூரில் குக்கி-ஜோ பழங்குடி மக்களுக்கு தனி மாநிலம் அல்லது சுயாட்சி நிர்வாகம் கோரி தமிழ்நாடு, மிசோரம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நவம்பர் 29-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடிகளான குக்கி- ஜோ இன மக்களுக்கும் மைத்தேயி இன மக்களுக்கும் இடையே கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. குக்கி இனப் பழங்குடிகள் மிக மோசமாக இந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் வன்முறைகளில் சுமார் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இன்னமும் மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை. இந்த நிலையில் மைத்தேயி இன மக்களுடன் தாங்கள் இணைந்து வாழ முடியாது- தங்களுக்கு தனி மாநிலம் அல்லது சுயாட்சி கவுன்சில் அமைத்து தர வேண்டும் என்பது குக்கி- ஜோ பழங்குடிகளின் கோரிக்கை. இதற்கு மிசோரம் மாநில அரசும் மக்களும் முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூரை இரண்டாக பிரித்து தனி மாநிலம் அல்லது சுயாட்சி நிர்வாகம் கோரும் இந்த கோரிக்கையை முன்வைத்து நவம்பர் 29-ந் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் போராட்டம் நடைபெறும் எனவும் குக்கி- ஜோ பழங்குடிகள் அறிவித்துள்ளனர். மிசோரம், திரிபுரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மணிப்பூரில் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
மேலும் மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காவை மணிப்பூர் பழங்குடி எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ஜோரம்தங்கா, நாகாலாந்து மாநிலத்தின் நாகா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என குக்கி- ஜோ பழங்குடிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றார். இதேபோல மத்திய அரசுடனுடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர் என்றார் ஜோரம்தங்கா.
மிசோரம் மாநிலத்தில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மிசோரம் மாநிலத்தின் மிசோ பழங்குடிகளும் மணிப்பூரின் ஜோ அப்பது சோ பழங்குடிகளும் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். இதனால் மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பாஜகவுக்கு எதிராக மிசோரம் கட்சிகள் வரிந்து கட்டி இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications