காஷ்மீரில் பல நூறு அடி உயரத்தில் இருந்து அறுந்து விழுந்த கேபிள் கார்- 7 பேர் பலி!
காஷ்மீரில் பல நூறு அடி உயரத்தில் இருந்து கேபிள் கார் அறுந்த விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் ரோப் கார் மீது மரம் விழுந்ததால் கேபிள் அறுந்து பல நூறு அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 7 பேர் பலியாகினர்.

காஷ்மீரின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமான குல்மார்க்கில் பிரெஞ்சு நிறுவனம் 1998-ம் ஆண்டு முதல் ரோப் கார் சேவையை இயக்கி வருகிறது. இன்றும் வழக்கம்போல ரோப் கார்கள் இயக்கப்பட்டன.
அப்போது காற்று பலமாக வீசியது. இதில் மரம் ஒன்று விழ, ரோப் காரின் கேபிள் கட் ஆனது. இதனால் பல நூறு அடி உயரத்தில் இருந்து ரோப் கார் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் பலியாகினர்.












Click it and Unblock the Notifications