16,000 மடங்கு வர்த்தகத்தை பெருக்கிய ஜெய்ஷா நிறுவனம்.. டிமானடைசேஷன் முன்பே ஏன் பூட்டு? காங். தாக்கு
டெல்லி: பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாக சரியாக, 4 வாரங்கள் முன்பு அமித்ஷா மகன் ஜெய்ஷா நடத்தி வந்த நிறுவனம் மூடப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
'தி வயர்' இணையதளத்தில், அமித்ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம் குறித்து வெளியான செய்திகள் குறித்து ஆனந்த் ஷர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
பங்காரு லட்சுமணன் அத்வானி, நிதின்கட்கரி போன்றோர் தங்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்தபோது பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தனர். அதைப்போல அமித்ஷாவும் இப்போது செய்ய வேண்டும்.

மோடி மவுனம் கலைக்க வேண்டும்
பிரதமர் இந்த விஷயத்தில் மவுனம் காக்கிறார். அவர் உடனடியாக வாய் திறக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எதற்கெடுத்தாலும், ஒவ்வொருவரையாக ராஜினாமா செய்ய கோரி வந்த பாஜக இப்போது வாய் திறக்க முடியாமல் உள்ளது. வியாபம் ஊழல், சஹாரா டைரி, ராமன் சிங் மகன் மீதும், ஆனந்திபென் பட்டேல் மகள் மீதும் புகார்கள் எழுந்தபோதும், மோடி கருத்தே தெரிவிக்கவில்லை.

ரிசர்வ் வங்கி விதிமுறைக்கு எதிரானது
கலுபூர் வணிக கூட்டுறவு வங்கி ரூ.25 கோடியை கடனாக அளித்துள்ளது. இதற்ககு பிணையாக ரூ.6.20 கோடி மதிப்புள்ள இரு சொத்துக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்கு எதிரானது. ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, அதிகபட்ச கடன் தொகை என்பது, அதிகபட்சமாக, பிணை வைக்கும் சொத்தின் மதிப்புக்கு இணையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் 4 மடங்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது அப்பட்டமான விதிமுறை மீறல். ஜெய் ஷா பிணை வைத்த சொத்துக்கள், அமித்ஷா மற்றும் போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவுடன் இணைந்து குற்றம்சாட்டப்பட் யஷ்பால் சுடாஸ்மாவுடையது.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறை
ஜெய்ஷாவுக்கு தனி திறமை இருக்க வேண்டும். ஏனெனில் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நிறுவனத்தை துவங்கிய ஓராண்டிலேயே நினைத்து பார்க்க முடியாத லாபத்தை அது பெற்றுள்ளது. எனவே அது என்ன தொழில் என்பதை அறிய இந்திய மக்களுக்கு உரிமை உள்ளது. வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டது என்ன பொருள், அதை வாங்கியவர்கள் யார், விற்றவர்கள் யார், எந்த நாட்டுக்கு அந்த பொருள் அனுப்பப்பட்டது என்பது குறித்தெல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று தெரிவித்தார் அவர்.

பணமதிப்பிழப்புக்கு முன்பாக
2015ம் ஆண்டு, நிலவரப்படி, ஜெய்ஷா நிறுவனம், 16000 மடங்கு அதிக வர்த்தகம் செய்து 'சாதித்துள்ளது'. அப்படியிருக்கும்போது, ஏன், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவிக்கும் முன்பாக சரியாக 4 வாரங்கள் முன்பு, ஜெய்ஷா நிறுவனம் மூடப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டாக வேண்டும். இவ்வாறு ஆனந்த்ஷர்மா மேலும் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications