சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிரஸ் மீட்டால் பங்குச் சந்தையிலும் பிரஷர்.. சரிந்த புள்ளிகள்
மும்பை: உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் பிரஸ் மீட் செய்ததன் விளைவாக பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். இதனால், ஸ்திரத்தன்மை மீது முதலீட்டாளர்களுக்கு ஐயம் எழுந்தது. எனவே, தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தையில் பங்குகள் சரிந்தன.
இன்று நண்பகல் 12.15 மணி நிலவரப்படி, மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் 34550.2 என்ற அளவுக்கு சரிந்தது. பிரஸ் மீட் ஆரம்பித்ததும் இந்த நிலையில் இருந்த பங்கு சந்தை, பிரஸ் மீட் முடியும்போது மதியம் சுமார் 12.35 மணிக்கு 34423.8 என்ற அளவுக்கு மேலும் சரி்ந்தது.
ஆக மொத்தம், மும்பை பங்கு சந்தை அரை மணி நேரத்தில் 183 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. 12.45 மணிக்கு பங்கு புள்ளிகள் மேலும் சரிவடைந்து 34349.99 என்ள அளவுக்கு சென்றது. பிரஸ் மீட்டுக்கு முந்தைய நிலையை ஒப்பிட்டால், இது 256 புள்ளிகள் சரிவாகும்.