தாத்தா என்று பாசத்தோடு அழைத்து வந்த 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அயோக்கியன்
காசியாபாத்: உத்திரப்பிரதேசத்தில் மழலையர் காப்பகத்தில் அதன் உரிமையாளரின் 60 வயது மாமனாரால், 5 வயது சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இயங்கி வரும் மழலையர் காப்பகம் ஒன்றை பெண் ஒருவர் நிர்வகித்து வருகிறார். அவருடைய காப்பகத்தில் பணிக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தைகள் பகல் நேரங்களில் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
அந்த குழந்தைகள் காப்பகத்தின் உரிமையாளரின் 60 வயது மாமனார் அருண் சின்ஹா. கடந்த சில மாதங்களாக இவர் அந்தக் காப்பகத்தில் உள்ள 5 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், இது தொடர்பாக தனது பெற்றோரிடம் அச்சிறுமி தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக அருண் மீது போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் அருண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த அயோக்கிய நபரை, அந்த சிறுமி அன்புடன் தாத்தா என்று பாசத்தோடு அழைப்பாளாம். இப்படிப்பட்ட சிறுமியைப் பலாத்காரம் செய்த அந்த நபர் மீது அப்பகுதியினர் கடும் கோபமடைந்துள்ளனர்.