நிதீஷ் முன்னிலையில் மோடியை புகழ்ந்த ஐக்கிய ஜனதள தலைவர் சிவானந்த் திவாரி
Subscribe to Oneindia Tamil

நிதீஷ்குமார் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு பாட்னாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிவானந்த் திவாரி, சாதாரண நிலையில் இருந்த மோடியை முதல்வராக்கி பிரதமர் வேட்பாளராக்கியிருக்கிறது பாஜக. ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தில் 2-ம் கட்ட தலைவர் யாரும் இல்லை. இஸ்லாமிய தலைவர் யாரும் இல்லை.
நரேந்திர மோடியை ஐக்கிய ஜனதா தளம் தவறாக மதிப்பிட்டுவிட்டது. நிதீஷ்குமாருடன் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் கீழ்மட்டத்தில் ஒருபோதும் வேலை செய்ததே கிடையாது என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
இதனால் கோபமடைந்த ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்கள் முழக்கமிட ஆலோசனை நடைபெற்ற இடத்தைவிட்டு சிவானந்த் திவாரி வெளியேறினார்.












Click it and Unblock the Notifications