அரசியல் எதிரி தேவகவுடாவை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்த சித்தராமையா.. எல்லாம் காவிரிக்காக
பெங்களூர்: காவிரி பிரச்சினைக்காக முன்னாள் அரசியல் குருநாதரும், தற்போதைய அரசியல் எதிரியுமான முன்னாள் பிரதமர் தேவகவுடாவை நேரில் சந்தித்து ஆலோசித்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
மதசார்பற்ற ஜனதாதள கட்சியில், தேவகவுடாவுக்கு வலதுகரமாக, அவருக்கு அடுத்த பிரபலமான தலைவராக விளங்கியவர் சித்தராமையா. ஆனால் பாஜக-ம.ஜ.த கூட்டணி ஆட்சியின்போது, தனது மகன் குமாரசாமியை முதல்வராக்கி அழகு பார்த்தார் தேவகவுடா.

இதனால் உறவை முறித்த சித்தராமையா, காங்கிரசில் இணைந்தார். முதல்வராகுவதை லட்சியமாக கொண்டே காங்கிரசில் இணைந்தார் சித்தராமையா என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல முதல்வர் வேட்பாளராக தன்னையே முன்னிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் கெடு விதித்து கட்சியில் இணைந்தார் சித்தராமையா.
அதன்படிதான், சீனியர்கள் இருந்தபோதும், சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராக்கி ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். இதனால் காங்கிரஸ் சீனியர் தலைவர்களுக்கு சித்தராமையா மீது கோபம் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. ஆனால், காங்கிரசில் சேர்ந்த ஐந்தே வருடங்களுக்குள் முதல்வராகிவிட்டதால், தேவகவுடா முன்பு காலரை தூக்கிவிட்டு நடந்தார் சித்தராமையா.
இது தேவகவுடாவுக்கு பிடிக்கவில்லை. சித்தராமையாவுக்கு தனது கட்சியினர் மூலம் பல்வேறு நெருக்கடிகளை மறைமுகமாக கொடுத்து பார்த்தார். ஆனால் குருவிடம் படித்த பாடத்தை வைத்து, அத்தனை தாக்குதல்ககளையும் முறியடித்தார் சித்தராமையா.
இப்படியாக ஒரு மோதல் உள்ள நிலையிலும், காவிரி விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய முடிவு குறித்து ஆலோசிக்க பெங்களூர் பத்மநாபநகரிலுள்ள தேவகவுடா இல்லத்திற்கு இன்று மாலை சித்தராமையா சென்றார். சித்தராமையா முதல்வரான பிறகு தேவகவுடா இல்லத்திற்கு சென்றது இதுதான் முதல்முறை. பொதுப்பணித்துறை மகாதேவப்பாவும், சந்திப்பின்போது உடனிருந்தார்.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேவகவுடாவிடம் தெரிவித்து அவரது ஆலோசனையை பெறவே சித்தராமையா சென்றார். அனுபவசாலியான தேவகவுடாவின் யோசனை முக்கியம் என்று அமைச்சரவையில் பல அமைச்சர்கள் சித்தராமையாவிடம் தெரிவித்ததாகவும், அதற்காகவே இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
சந்திப்புக்கு பிறகு முதல்வர் நிருபர்களிடம் கூறுகையில், நிறைய விஷயங்கள் பேசினோம். அதையெல்லாம் வெளியே தெரிவிக்க முடியாது. காவிரி பற்றிதான் முக்கியமாக விவாதித்தோம். மாலை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தேவகவுடாவையும் பங்கேற்க அழைத்தேன். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications