புதிய தலைநகரம், விவேகானந்த ரெட்டி படுகொலை, முஸ்லிம் இடஒதுக்கீடு- ஆந்திரா களத்தில் 'தெறி' பிரச்சனைகள்
விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தல் களத்தில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு, முன்னாள் எம்பியும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவுமான விவேகானந்த ரெட்டியின் படுகொலை, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்கள் முதன்மை பிரச்சனைகளாக ஆக்கிரமித்திருக்கின்றன.
ஆந்திராவின் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா தேர்தல் களத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம், ஜனசேனா, காங்கிரஸ், பாஜக மற்றும் இடதுசாரிகள் உள்ளனர்.

ஆந்திரா தேர்தல் களத்தில் மையம் கொண்டிருக்கும் முதன்மை பிரச்சனைகள்:
சிறப்பு அந்தஸ்து: ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்கிற வாக்குறுதி வழங்கப்பட்டது. இப்போது வரை ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் வழங்கப்படாமல் இருப்பது முதன்மை பிரச்சனைகளில் ஒன்று.
புதிய தலைநகரம்: ஆந்திராவின் தலைநகராக இருந்த ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு தாரை வார்க்கப்பட்டது. ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி நகரம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜெகன் மோகன் ஆட்சியில் விசாகப்பட்டினம் புதிய தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. புதிய தலைநகரம் விகாரமும் ஆந்திரா தேர்தல் களத்தில் எதிரொலிக்கிறது.
நாயுடுவின் ஊழல்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது ஊழலில் ஈடுபட்டார் என கைது செய்து சிறையில் அடைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி. 53 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுதலையானார் நாயுடு. சந்திரபாபுவுக்கு எதிராக ஊழலை முதன்மை ஆயுதமாக பயன்படுத்துகிறார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இவற்றுக்கு அப்பால் வேலைவாய்ப்பின்மை, பண வீக்க விகிதம் ஆகியவையும் தேர்தலில் எதிரொலிக்கிறது.
விவேகானந்த ரெட்டி படுகொலை: இத்தேர்தலில் முன்னாள் எம்பி விவேகானந்த ரெட்டி படுகொலை முக்கிய இடம் பிடித்திருக்கிறது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்தா ரெட்டி படுகொலை வழக்கை ஜெகன் முறையாக விசாரிக்கவில்லை என அவருக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுத்திருப்பது ஜெகனின் சகோதரியும் ஆந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளாதான். இது ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடும் நெருக்கடியையும் கொடுத்திருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications