இலங்கை சிறையில் இருந்து 20 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!
இலங்கை சிறையில் இருந்து 20 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இலங்கையிலிருந்து 20 தமிழக மீனவர்கள் விடுவிப்பு- வீடியோ
காரைக்கால்: இலங்கை சிறையில் இருந்து 20 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய பெருங்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த 20 மீனவர்கள் சில வாரம் முன்பு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள். மேலும் இவர்கள் அங்கு இருக்கும் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

தற்போது இந்த மீனவர்கள் 20 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் படகுகள், சிலரின் வலைகளும் திருப்பி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இவர்கள் அனைவரும் தற்போது காரைக்கால் வந்துள்ளனர். அங்கிருந்து பின் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications