தொடரும் சீனாவுடனான மல்லுக்கட்டு ... தூதரக ரீதியிலான தீர்வை நோக்கி இந்தியா!
டோக்லாம் பீடபூமி விவகாரத்தில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதை காட்டிலும் தூதரக ரீதியில் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது.
டெல்லி: பூடானுக்கு சொந்தமான டோக்லாம் பீடபூமி விவகாரத்தில் தூதரக ரிதீயில் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது.
இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த பகுதி நம் கட்டுப்பாட்டில் உள்ளதாலும் இந்திய ராணுவம் அப்பணியை தடுத்து நிறுத்தியது. இதனால் சீன ராணுவம் நம் மீது காண்டாக உள்ளது.

ராணுவத்தினர் குவிப்பு
சர்ச்சைக்குரிய அந்த எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் 120 மீட்டருக்கு அப்பால் டென்ட் அடித்தது போல் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இரு நாட்டினரும் தற்போது உள்ள நிலையிலேயே உள்ளனர்.

எந்த முன்னேற்றமும் இல்லை
பிரச்சினை தீருவதற்கு எந்தவித நடவடிக்கையையும் இந்தியா எடுக்கவில்லை. இரு நாட்டு வீரர்களும் அவரவர் நிலைகளை மீறக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Recommended Video


உயர் அதிகாரிகள் மௌனம்
எல்லை விவகாரத்தில் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர். மேலும் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் அளவில் பேச இந்தியா விரும்பவில்லை. இதனால் பதற்றம் நீடித்து வருகிறது.

தூதரக அதிகாரிகள்
மாறாக இந்த பிரச்சினை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றால் தூதரக ரீதியில் கையாள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. உயரதிகாரிகள் அமைதி காத்தாலும் இந்த விவகாரத்தில் விரைவில் கூடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்துவர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications