குரங்கிலிருந்து வரலையாம் மனிதன்.. இப்படியும் ஒரு மத்திய அமைச்சர்
குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாடு தவறானது எனவும் அதை பாட புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் கூற
ஓளரங்காபாத்: குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும்
நம்முடைய மூதாதையர்கள் யாரும் இந்தக் கருத்தை எழுதவும் இல்லை என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சத்யபால் சிங் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் நகரில் அகில இந்திய வேதிக் சம்மேளன மாநாடு நடைபெற்றது.
இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் கலந்து கொண்டார்.

மாநாட்டில் பேசிய அவர், குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இதுதொடர்பான டார்வின் கோட்பாடு தவறு என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய சத்யபால் சிங், குரங்கில் இருந்து மனிதன் வந்ததை நமது மூதாதையர்கள் கண்டதாகக் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார். பண்டைய கால இலக்கியம், வரலாறு, கதைகள் உள்பட எதிலுமே அத்தகைய கருத்தை நமது முன்னோர்கள் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தாத்தா, பாட்டி சொன்ன கதைகளில் கூட அவ்வாறு யாரும் குறிப்பிடவில்லை என்பதால் அதை பள்ளி மற்றும் கல்லூரிப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் சத்யபால் சிங் ஓய்வு பெற்ற ஐ,பி.எஸ் அதிகாரி.
மும்பை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றியுள்ளார். ஜீன்ஸ் பேண்ட் அணிந்து தன் திருமணத்துக்கு வரும் பெண்களை எத்தனை ஆண்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று ஒரு முக்கியமான கேள்வியை ஏற்கெனவே எழுப்பி சர்ச்சையில் சிக்கியவரும் இதே சத்யபால் சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பலரும் கிண்டலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications