அரசு விளம்பரங்கள் விவகாரம்... உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனு விசாரணைக்கு ஏற்பு
டெல்லி : மாநில அரசுகள் வெளியிடும் விளம்பரங்களுக்கு உச்ச நீதிமன்றம் வித்த கட்டுப்பட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவால் அரசு விளம்பரங்களில் மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மறுஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் அசாம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் சார்பிலும் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியதுடன், அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்களின் படங்களும் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை நேற்று பரிசீலித்த உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. மேலும், இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை தொடங்கும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications