ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து உதவுவோம்: கர்சாயை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ் வாக்குறுதி
காபுல்: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயை சந்தித்து பேசினார்.
ஆப்கானிஸ்தானில் அண்மையில் தான் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா, முன்னாள் நிதி அமைச்சர் அஸ்ரப் கனி ஆகியோர் போட்டியிட்டனர். மக்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று ஆப்கானிஸ்தான் சென்றார்.

விமான நிலையத்தில் இறங்கிய அவர் நேராக அதிபர் மாளிகைக்கு காரில் சென்றார். அங்கு அவர் அதிபர் ஹமீது கர்சாயை சந்தித்து பேசினார். அப்போது அரசியல், பாதுகாப்பு நிலைமை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஆப்கானிஸ்தானுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக சுஷ்மா தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்பு பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என்று சுஷ்மா கர்சாயிடம் உறுதி அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் இந்த ஆண்டு இறுதியில் கிளம்ப உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்த அந்நாடு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. இந்நிலையில் தான் சுஷ்மா ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார்.
நேட்டோ படைகள் கிளம்புவதால் ராணுவத்திற்கு உதவுமாறு கர்சாய் இந்தியாவிடம் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications