சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றினால் தான் பேச்சுவார்த்தை.. ஓபிஎஸ் திட்டவட்டம்!
சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து வெளியேற்றினால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து வெளியேற்றினால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் இயக்கமாக செயல்படவேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை நிரப்ப வேண்டும், டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோரிடம் நடத்தப்படும் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் ஓபிஎஸ் தலைமையில் அவரது அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இரு அணிகள் இணைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கோட்பாட்டிலிருந்து விலகவில்லை
அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தின் அடிப்படை கோட்பாட்டிலிருந்து விலகவில்லை என்றார். இன்னமும் அதிமுகவின் ஆதரவு நாளிதழான நமது எம்ஜிஅர் பொதுச்செயலாளர் என சசிகலா பெயரை குறிப்பிட்டும் துணைப் பொதுச்செயலாளர் என டிடிவி தினகரனின் பெயரை குறிப்பிட்டும் செய்தி வெளியிடுவதாக தெரிவித்தார்.

சசி குடும்பத்தை நீக்கினால்தான்..
சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கினால்தான் பேச்சுவார்த்தைக்கு முடிவு வரும் என்றும் அவர் கூறினார். கட்சி எந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும் செல்லக்கூடாது என்றும் அவர் கூறினார்.

தொண்டர்கள் இயக்கமாக..
அவர்களின் குடும்பத்திற்கும் கட்சி செல்லக்கூடாது, எங்களின் குடும்பத்திற்கும் கட்சி வந்துவிடக் கூடாது. அதிமுக எப்போதும் தொண்டர்கள் இயக்கமாக செயல்பட வேண்டும்.

மக்களுக்கு தெரியும்..
அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக மீட்டெடுப்போம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பேச்சுவார்த்தை யாரால் தடைபடுகிறது என்பது மக்களுக்கு தெரியும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications