For Daily Alerts
Just In
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: இளம்பெண் பலி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இளம்பெண் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பூஞ்ச் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றும் எல்லையோரப் பகுதிகளில் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், கிக்ரியால் பகுதியில் ஸாகிரா அக்தர் என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்தனர்.
Comments
English summary
A 17-year-old girl was killed and four other civilians injured in Poonch district on Friday during stepped up firing by Pakistan at different places along the Line of Control (LoC) and the international border in Jammu Kashmir.
Story first published: Saturday, October 4, 2014, 12:20 [IST]