தேர்தல் விதிகளை மீறியதாக ராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீஸ்.. வாபஸ் வாங்கியது தேர்தல் ஆணையம்
குஜராத்தில் தேர்தல் விதிகளை மீறியதற்காக ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட நோட்டீஸை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.
டெல்லி : குஜராத்தில் தேர்தல் விதிகளை மீறி தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்ததற்காக ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் விதிமீறலுக்கான நோட்டீஸை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 9 மற்றும் 14 ஆகிய தேதிகள் நடந்தது. இதில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்த 14ம் தேதிக்கு முன்னதாக, சில தொலைக்காட்சிகளில் ராகுல் காந்தியின் பேட்டி ஒளிபரப்பானது.

இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்றும், ராகுல் காந்தி சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறியதாகவும் நடவடிக்கை எடுக்குமாறும் பா.ஜ.க தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.
அதன் அடிப்படையில், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்னதாக அனைத்து வித பிரச்சாரங்களையும் முடித்துக்கொள்ள வேண்டும் என்கிற தேர்தல் நடத்தை விதியை மீறியதாகவும், இதற்கு 18ம் தேதி மாலை ஐந்து மணிக்குள் ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், நேற்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ராகுலுக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த அறிக்கையில், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்னதாக எந்த வித பிரச்சாரத்திலும் ஈடுபடக்கூடாது என்பது தான் 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ விதி.
இதில் டி.வி., ரேடியோ, இணையம் போன்றவை சேர்க்கப்படவில்லை இதை காங்கிரஸ் கட்சியினர் சுட்டிக்காட்டினர். இதனால் விரைவில் இவற்றை இந்தப்பட்டியலில் இணைத்து புது சட்டம் நிறைவேற்றப்படுமா என்பதை சட்ட ஆய்வுக்குழு முடிவு செய்யும் இதன் காரணமாக ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications