அரசுக்கு எதிராகச் செயல்பட்ட 735 சமூக வலைத்தளங்கள்.. 596 இணையதளப் பக்கங்கள் முடக்கம்!
ஆன்டி இந்தியன் கருத்துக்களை வெளியிட்ட 735 சமூக வலைத்தளங்கள் மற்றும் 596 இணையதள பக்கங்களை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மத்திய அரசு முடக்கியுள்ளது.
டெல்லி: ஆன்டி இந்தியன் கருத்துக்களை பரப்பி வந்த 735 சமூக வலைத்தளங்கள் மற்றும் 596 இணையதள பக்கங்களை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மத்திய அரசு முடக்கியுள்ளது.
அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் சமூக வலைத்தளங்களும் இணையதளங்களும் பெரும் பங்கெடுத்து வருகின்றன. இளைஞர்களை ஒன்றிணைப்பதிலும் இணையதளங்கள் முக்கிய கருவியாக உள்ளன.
இதுவரை மேற்கத்திய நாடுகளில் மட்டுமே அரசுக்கு எதிரான போராட்டங்களில் மக்களை ஒன்றிணைப்பதில் சமூக வலைத்தளங்களும் இணையதளங்களும் பெரும் பங்காற்றின. இந்நிலையில் இந்தக் கலாச்சாரம் இந்தியாவிலும் ஊடுருவத் தொடங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்கள் முடக்கம்
இணையதளங்கள் மூலம் தேச விரோத கருத்துகள் பரப்பப்படுவதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஆன்டி இந்தியன் கருத்துக்களை பரப்புவதாகக் கூறி சில சமூக வலைத்தளங்களும் இணையதள பக்கங்களையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.

ஆன்டி இந்தியன் கருத்துக்கள்
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி பி சௌத்ரி, ராஜ்யசபாவில் இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். அதில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆன்டி-இந்தியன் கருத்துக்களைப் பகிரும், வெளியிடும் சமூக வலைத்தள மற்றும் இணையப் பக்கங்கள் மற்றும் குழுக்கள் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழுக்கள் தேர்வு
பல நீதிமன்றங்களின் வழக்குகள் மற்றும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் படி முடக்கப்பட வேண்டிய பக்கங்களைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறியுள்ளார். தகவல் தொழில்நுட்பங்கள் தேசத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும்போது அரசுக்குச் சரியான நேரத்தில் தகவல் அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம்
தகவல் தொழில்நுட்பச் சட்டம்- 2000 பிரிவு 69 A-ன் படி சட்ட அமலாக்கத்துறை சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளப்பங்களைத் தொடர்ச்சியாக கண்காணித்து வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசத்திற்கு எதிரான கருத்துகள் பகிரப்படும்போது, அதற்கான அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கும் அந்த அறிக்கையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி பி சௌத்ரி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications