நலத்திட்டங்கள் மூலம் அனைவரும் பயனடைவதை உறுதி செய்ய புதிய யோசனை! மாஸ் காட்டும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதி செய்யவும், மாநிலத்தின் குடும்ப அலகுகளின் நேரடி விரிவான தரவுத்தளத்தை உருவாக்கவும் 'ஒரு குடும்பம் ஒரு அடையாளம்' திட்டத்தின் கீழ் குடும்ப ஐடியை உருவாக்குவதற்கான போர்ட்டலை உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மாநில அரசு மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. இதற்காக பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல புதிய திட்டங்களும் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாதான் தற்போது 'ஒரு குடும்பம் ஒரு அடையாளம்' எனும் திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்திருக்கிறார்.

இதன் மூலம், ரேஷன் கார்டு இல்லாத மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வராத குடும்பங்கள் குடும்ப அட்டையை விண்ணப்பித்துக்கொள்ளலாம். அதேபோல தற்போது வரை இந்த திட்டத்தில் சேர்ந்த குடும்பங்களின் முழு விவரங்களையும் அரசு ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது. குறிப்பாக வீட்டில் எத்தனை இளைஞர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை இருக்கிறதா? மூத்த குடிமக்கள், பெண்கள் எத்தனை பேர்? அவர்களுக்கான உதவி தொகைகள் கிடைக்கிறதா? போன்ற தகவல்களை அரசு சேகரித்து வருகிறது.
இந்த தகவல்களை கொண்டு அனைத்து குடிமக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் சென்று சேருகிறதா? என்பதை அதிகாரிகள் அறிந்துக்கொண்டு அதற்கேற்ப செயலாற்றுவார்கள். அதேபோல வேலைவாய்ப்புகளிலும், இந்த தகவல்களிலிருந்து சேகரிக்கப்படும் தகவல்களை கொண்டு வேலை வாய்ப்பும் வழங்கப்படும். தற்போது உ.பியில் சுமார் 15 கோடி பேர் உத்தரப் பிரதேசத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இதில் விடுபட்டவர்கள் https://familyid.up.gov.in/portal/index.html என்ற போர்டல் மூலம் குடும்ப அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டல் 12 இலக்க ஐடி எண்ணை உருவாக்கி கொடுக்கும். தற்போது வரை 78 ஆயிரம் அப்ளிகேஷன்கள் வந்திருப்பதாகவும், இதில் 37 ஆயிரம் அப்ளிகேஷன்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications