நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை தமிழகத்தில் காவிரி வாரியம் என அழைத்துக் கொள்ளட்டும்: மத்திய அரசு
நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை தமிழகத்தில் காவிரி வாரியம் என்று அழைத்து கொள்ளட்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை தமிழகத்தில் காவிரி வாரியம் என்று அழைத்து கொள்ளட்டும் என்று மத்திய நீர் வளத் துறை செயலாளர் யு.பி. சிங் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் அதை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதே போல் ஸ்கீம் என்றால் என்ன என்ற சந்தேகம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் 3 மாதம் கால அவகாசம் கோரியும் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. இரு மனுக்களும் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஆலோசனை கூட்டம்
அப்போது காவிரி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை மே 3-ஆம் தேதிக்குள் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து டெல்லியில் மத்திய நீர் வளத் துறை செயலாளர் யு.பி.சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

பெயர் எதுவாக இருந்தாலும்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிங் கூறுகையில், காவிரி வாரியம் பெயரில் பிரச்சினையில்லை. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் பெயர் எதுவாக இருந்தாலும் பிரச்சினையில்லை.

தீர்ப்பு மட்டுமே ஆலோசனை
காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழகத்தில் அழைக்க எந்த பிரச்சினையும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்படுகிறது.

கூட்டாட்சி அடிப்படையில்
காவிரி விவகாரத்தில் அந்த மாநிலங்கள் அதன் நலன்களை மட்டுமே பார்க்கின்றன. ஆனால் மத்திய அரசு கூட்டாட்சி அடிப்படையில் பார்க்கிறது. காவிரி விவகாரத்தில் எது சிறந்ததோ அதை மத்திய அரசு செய்யும். நடுவர் மன்ற உத்தரவை இணைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது என்றார் சிங்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications