''வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்''- ப.சி. சொன்ன பட்ஜெட் குரல்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வழக்கம்போல் தமது உரையில் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டினார்.
மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்று, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போதெல்லாம் ப.சிதம்பரம் தமது உரையின் நிறைவில் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி முடிக்கும் போது கீழ்க்கண்ட திருக்குறளை மேற்கோள்காட்டினார் ப.சிதம்பரம்.
சிதம்பரம் சொன்ன குறள்
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்
என்ற திருக்குறளைச் சொல்லி அதன் பொருளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார் ப.சிதம்பரம்.
செங்கோண்மை அதிகாரம்
ப.சிதம்பரம் மேற்கோள்காட்டிய இந்த திருக்குறள் செங்கோன்மை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.
குறள் எண்- 546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின் என்ற இந்த குறளி எண்: 546.
பொருள் என்ன?
"ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று; அரசனுடைய செங்கோலே ஆகும்; அச்செங்கோலும் கோணாதிருக்குமாயின்" என்பதுதான் இந்த திருக்குறளின் பொருள்.