பஞ்சாப் வங்கி முறைகேட்டில் முக்கிய புள்ளி சிக்கினார்.. மும்பை ஏர்போர்ட்டில் 'தூக்கியது' சிபிஐ
டெல்லி: கீதாஞ்சலி குரூப் நிறுவனங்களின் துணை தலைவர் விபுல் சைத்தாலியாவை சிபிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.12,600 கோடி முறைகேடுகளில் மூளையாக இருந்தவர் இவர்தான் என்று சிபிஐ தெரிவிக்கிறது.
கீதாஞ்சலி ஜுவல்லரி நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும் சேர்மேனுமான மேகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் வங்கியில் இவ்வளவு பெரிய அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட மூளையாக இருந்தது விபுத்ல சைத்தாலியா என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்ரன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 19வது நபர் சைத்தாலியாவாகும். பஞ்சாப் வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ 2 எப்ஐஆர்களை பதிவு செய்துள்ளது. முதல் எப்ஐஆரில் நீரவ் மோடி அவர் மனைவி அமி, சகோதரர் நிஷால், உறவுக்காரர் மேகுல் சோக்சி உள்ளிட்ட பலர் பெயர்கள் சேர்க்கப்பட்டன. 2வது எப்ஐஆரில் மேகுல் சோக்சி மற்றும் அவரது கீதாஞ்சலி ஜுவல்லரி தொடர்பானவர்கள் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இரு எப்ஐஆர்கள் அடிப்படையில் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.
சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விபுல் சைத்தாலியாவுக்கு மார்ச் 17ம் தேதிவரை சிபிஐ காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அவரிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளது.
பேங்காங்கில் இருந்து மும்பை வந்தபோது ஏர்போர்ட்டில் வைத்தே அலேக்காக தூக்கிவிட்டது சிபிஐ. முன்னதாக சைத்தாலியாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீசையும் சிபிஐ பிறப்பித்திருந்தது.












Click it and Unblock the Notifications