டெல்லியில் 7 நாட்களாக நடந்த தமிழக விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
டெல்லி: டெல்லியில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த தொடர் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சுமார் 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். நதிகளை இணைப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்திக்க நேரம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார். விவசாயிகளின் பிரச்சினை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, பாமக எம்.பி., அன்புமணி ராமதாஸ், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ரங்கராஜன் ஆகியோரும் தமிழக விவசாயிகளை சந்தித்தனர்.
மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, மாநிலங்களவையின் அதிமுக தலைவர் நவநீதிகிருஷ்ணன், மக்களவை அதிமுக அவைத்தலைவர் டாக்டர் பி.வேணுகோபால் உறுப்பினர்கள் எஸ்.வைத்தியலிங்கம், அன்வர் ராஜா ஆகியோரும் இன்று மதியம் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications