சபரிமலை கோயிலுக்கு பெயர் மாற்றம்... பழைய பெயரையே சூட்ட முடிவு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பழைய பெயரையே வைக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் என்ற பழைய பெயரையே வைக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு கார்த்திகை மாதம், தை மாதம் என பல்வேறு தருணங்களில் நடை திறந்திருக்கும் வேளைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்வர்.

இந்த கோயிலுக்கு 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு காலம் காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. பாலின பாகுபாடு தேவையில்லை என்றும் பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கோரி வருகிறது.
எனினும் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. பெண்களை அனுமதிக்க முடியாது என்று தேவஸ்வம் போர்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பெண்கள் அனுமதி குறித்த வழக்கில் மேற்கொண்டு விவாதம் செய்ய சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெயர் மாற்ற திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு முடிவு செய்துள்ளது.
அதன்படி சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் என்ற பழைய பெயரையே வைக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நேற்று முடிவு செய்துள்ளது. இந்த பெயர் மாற்றம் பக்தர்களுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications