மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - நாளை வாக்குப் பதிவு
மும்பை: மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை அங்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. அதே நாளில் ஹரியானா மாநில சட்டசபையின் 90 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசு அமைந்த பிறகு காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநில சட்டசபைகளுக்கு பொதுத்தேர்தல் நடப்பதால், இது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி பிரசாரம்
மகாராஷ்டிராவில் கடந்த 2 வாரமாக அனல் பறந்த பிரசாரம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் 20 இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

சோனியா, ராகுல்
இதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்தனர்.

வாக்கு வேட்டை
இறுதி நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி 3 இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாநில தலைவர்களும், வேட்பாளர்களும் போட்டி, போட்டு தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.

ஹரியானாவிலும் பிரசாரம் ஓய்வு
அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. ஹரியானா மாநிலத்திலும் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இம்மாநிலத்தில் பிரதமர் மோடி 10 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

பரபரப்பை ஏற்படுத்திய சவுதாலா
ஆசிரியர் தேர்வு ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமீனில் வெளிவந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனால் ஜாமீன் நிபந்தனைகளை மீறிய அவரை சரண் அடைய உத்தரவிட்ட நீதிமன்றம் சிறையில் அடைத்தது. இது ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளை வாக்குப் பதிவு
மகாராஷ்டிரா, ஹரியானா இரு மாநிலங்களிலும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications