டெல்லயில் பெண் பலாத்காரம்: உபேர் டிரைவருக்கு ஆயுள் தண்டனை
டெல்லி: டெல்லியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த உபேர் கார் டிரைவர் ஷிவ்குமார் யாதவுக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பரில் 25 வயது இளம்பெண், உபேர் கார் டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலாத்கார குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இவ்வழக்கில் உபேர் நிறுவனத்தின் கார் டிரைவர் ஷிவ்குமார் யாதவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் டெல்லி செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, ஷிவ்குமார் யாதவை குற்றவாளி என கடந்த 20-ந் தேதி அறிவித்தார். மேலும் ஷிவ்குமார் யாதவுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதித்து இன்று நீதிபதி காவேரி பவேஜா தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications