தெலுங்கானா மசோதாவுக்கு சிறப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- ஹைதராபாத் பொதுதலைநகர்!

தெலுங்கானா தனி மாநில மசோதாவை ஆந்திர சட்டசபை நிராகரித்தது. அதனால் அந்த மசோதா ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு, மாநில சட்டசபையின் ஒப்புதல் இன்றி தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து நேற்று சிறப்பு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
முக்கிய அம்சங்கள்
இந்தக் கூட்டத்தில் தெலுங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதைய மசோதாவில் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று சீமாந்திரா பகுதி அமைச்சர்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக பின்தங்கிய பகுதிகளாக கருதப்படும் ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்த மசோதாவை, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் வரும் 12ந் தேதி ராஜ்யசபாவில் தற்போதைய வடிவிலேயே தாக்கல் செய்யவும், அதன் மீது விவாதம் வரும் போது அதில் மேற்கொள்ள வேண்டிய 32 திருத்தங்களைக் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ள இம் மசோதாவில் ஹைதராபாத் நகரம் தெலுங்கானவுக்கும், சீமாந்திராவுக்கும் குறிப்பிட்ட காலத்துக்கு பொதுவான தலைநகரமாக செயல்படும்.
காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம்
இக் கூட்டம் முடிவடைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் பொதுச் செயலரும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பொறுப்பாளருமான திக்விஜய் சிங் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தெலுங்கானா விவகாரதில் தற்போதைய நிலையை விளக்கினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications