ஜல்லிக்கட்டு நடத்த 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வெளியாகும்: பிரகாஷ் ஜவடேகர் உறுதி
டெல்லி: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்குவது குறித்து 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியான ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்துவது தொடர்பாக இரண்டு நாட்களில் நல்ல அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும்.

கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காளைகளை மையமாக வைத்து நடத்தப்படும் போட்டிகள் பாரம்பரியமிக்கது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு சில வழிகளை கண்டுபிடித்துள்ளது. பாரம்பரியம்,கலாச்சாரத்தை காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இன்னும் 2 நாட்களில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நல்ல அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.
காளைகள் துன்புறுத்துவதாக கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இந்த தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துபவர்கள் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுப்ட்டுள்ளனர். மாடு பிடி வீரர்களும் தங்களை தீவிரம்க தாயார் படுத்தி வருகின்றன.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications