ஜல்லிக்கட்டு நடத்த 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வெளியாகும்: பிரகாஷ் ஜவடேகர் உறுதி
டெல்லி: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்குவது குறித்து 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியான ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்துவது தொடர்பாக இரண்டு நாட்களில் நல்ல அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும்.

கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காளைகளை மையமாக வைத்து நடத்தப்படும் போட்டிகள் பாரம்பரியமிக்கது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு சில வழிகளை கண்டுபிடித்துள்ளது. பாரம்பரியம்,கலாச்சாரத்தை காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இன்னும் 2 நாட்களில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நல்ல அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.
காளைகள் துன்புறுத்துவதாக கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இந்த தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துபவர்கள் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுப்ட்டுள்ளனர். மாடு பிடி வீரர்களும் தங்களை தீவிரம்க தாயார் படுத்தி வருகின்றன.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications